சளி பிரச்சனைக்கு சரியான தீர்வு
ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான சூட்டில் உள்ள வெந்நீருடன் சிறிது தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சனை நீங்கும் . சளி வராமல் இருக்க பாகற்காயின் வேரை விழுதாக அரைத்து , ஒரு தேக்கரண்டி அளவு அதனை எடுத்து கொண்டு அத்துடன் சம அளவு தேன் அல்லது துளசி சாறை சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட சளி வராமல் இருக்கும் . நெஞ்சு சளி உள்ளவர்கள் ரோஜாப் பூ இதழ்களை பாலில் தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நிங்கும் மற்றும் இரத்த விருத்திக்கு துணை புரியும் . பூண்டு ஒரு பத்து பற்கள் எடுத்து நன்றாக நசுக்கி , 5 மிளகு எடுத்து நசுக்கி ,ஒரு க்ளாஸ் பாலில் போட்டு ,ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து சுண்டக்காய்ச்சி அந்தப்பாலை மட்டும் குழந்தைக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி நீங்கும். ஏலக்காயை பொடி செய்து அதனை காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்பு சளி குணமாகும். தூதுவளை இலையை 10 எடுத்து நல்லெண்ணெய் அல்லது வெண்ணெயில் வதக்கி வெறும் வயிற்றில் காலை நேரத்தில் மூன்று நாட்கள் தொடர்து சாப்பிட்டு வர குளிர்காலத்தில் ஏற்படும் சளிப...